தமிழ்நாடு

மக்கள் சேவைக்கே முக்கியத்துவம்: எம்.எல்.ஏ. நடராஜ்

DIN

மக்கள் சேவைக்கே முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளத்தில் அவர் சனிக்கிழமை கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ அலுவலகத்தில்தான் இருக்கிறேன். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். தொகுதியில் இல்லை என சிலர் தவறாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் நான் நியாயமாக செயல்பட விரும்புகிறேன். மக்களுக்காக சேவையாற்றுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை.
மேலும், மக்களுக்கு சேவை ஆற்றவே, ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியை பரிசாக அளித்துள்ளார். மக்கள் சேவைக்கே முக்கியத்துவம் தருவேன் என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT