தமிழ்நாடு

ஆளுநரிடம் இருந்து இன்று மாலைக்குள் அழைப்பு வரலாம்:  வைகைச் செல்வன்

DIN


சென்னை: ஆட்சி அமைக்க வருமாறு வி.கே. சசிகலாவுக்கு ஆளுநரிடம் இருந்து இன்று மாலைக்குள் அழைப்பு வரலாம் என்று வைகைச் செல்வன் கூறியுள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் இன்று முற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர்  வைகைச் செல்வன் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு வி.கே. சசிகலாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலைக்குள் அழைக்கலாம் என்று வைகைச் செல்வன் கூறியுள்ளார்.

அதோடு, ஆளுநரின் தாமதத்துக்கு பாஜக, திமுக அழுத்தம் தருவதே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது தாமதமாவதால் ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆளுநர்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழகத்தில் சசிகலா தலைமையில் ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபித்த பிறகு மக்கள் சேவை செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தயாராக உள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க விகே சசிகலாவுக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT