தமிழ்நாடு

நீதிபதி கௌலுக்கு ராமதாஸ் வாழ்த்து

DIN

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சஞ்சய் கிஷன் கௌலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்து செய்தி:
இரண்டரை ஆண்டுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர், ஏராளமான சீர்திருத்தங்களை மேற்கொண்டார். நீதித் துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கௌல், ஊழல் புகார்களுக்குள்ளான 9 நீதிபதிகளை பணி நீக்கம் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் பதவி நீக்கம், தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் அவர் அளித்த தீர்ப்புகள் முன்னுதாரணமானவையாகும். உச்ச நீதிமன்றத்தில் அவர் இன்னும் ஏழு ஆண்டுகள் பணியாற்ற முடியும் என்பதால், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை அவரால் வழங்க இயலும். நீதிபதி கௌலின் புதிய பணி சிறக்க வாழ்த்துகள் என்று ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT