தமிழ்நாடு

தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்த வேறு பள்ளி ஆசிரியை

DIN

வேறு பள்ளி ஆசிரியை ஒருவர், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து கொண்டு எழுந்திருக்க மறுத்து அடம்பிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சீதாலட்சுமி (48). இவர், வெள்ளிக்கிழமை காலை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். இதன் பிறகு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டை கையில் வைத்துக் கொண்ட சீதாலட்சுமி, ஒவ்வோர் ஆசிரியரிடமும் கேள்வி எழுப்பினார்.
"வருகைப் பதிவேட்டைக் கொடுங்கள்' என அவரிடம் ஆசிரியர்கள் கேட்டபோது கொடுக்க மறுத்து, தான் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்துக் கொண்டார். தலைமை ஆசிரியர் அல்லிமுத்து விடுமுறையில் சென்றுவிட்டதால், உதவித் தலைமை ஆசிரியர் ஜெகதீசன் அங்கு வந்து, ஆசிரியை சீதாலட்சுமியை தலைமை ஆசிரியர் இருக்கையில் இருந்து எழுந்திருக்குமாறு கூறினார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
தகவலறிந்து நாமக்கல் வட்டாட்சியர் சுகுமார் அங்கு வந்தார். வட்டாட்சியர் மற்றும் போலீஸார் சீதாலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சீதாலட்சுமி, என்னுடைய கனவில் வியாழக்கிழமை இரவு சிவபெருமான் வந்தார். அப்போது இந்தப் பள்ளிக்குப் போ என ஆணையிட்டார். அதனால் இங்கு வந்தேன். தலைமை ஆசிரியர் அறையில் இல்லை. இருக்கை காலியாக இருந்ததால் அமர்ந்து விட்டேன் என்றார்.
இதனையடுத்து, வருகைப் பதிவேட்டை வாங்கி வைத்துக் கொண்டு சீதாலட்சுமி வீட்டுக்குத் தகவல் தெரிவித்த வட்டாட்சியர், அவரை குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

SCROLL FOR NEXT