கோவை: ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் விவசாயிகள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
நீட் தேர்வு குறித்து வரும் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும். ஜெயலலிதா மரணம் குறித்து சிலர் வேண்டாத வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றார்.