தமிழ்நாடு

மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: டிடிவி தினகரன்

DIN


சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசிய மு.க. ஸ்டாலின் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிய ஸ்டாலின் தனது பேச்சை திரும்பப் பெறுவதோடு, அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் வெல்லமும் கொண்டவர் மு.க. ஸ்டாலின். துண்டுச் சீட்டு துணையுடன் பேசும் ஸ்டாலின், ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

வாரிக் கொடுத்த வள்ளல், தமிழர்களின் உள்ளத்தில் ஈடு இல்லாத புகழுடன் இருப்பவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதா? என்றும் தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT