தமிழ்நாடு

துணைவேந்தர் நியமன சிக்கலுக்கு தீர்வு: பல்கலை. ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

DIN

துணைவேந்தர் நியமன விதிமுறை சிக்கலுக்குத் தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் பசுபதி வெளியிட்ட அறிக்கை:-
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.
இந்தப் பணிக்கு இணைப் பேராசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பும் உள்ளது. இதற்கு எதிராக விதிகளை மீறி தெரிவுக் குழு வெளியிட்ட அறிவிப்பு உள்ளது.
இந்தப் பிரச்னையில் தலையிட்டு, இணைப் பேராசிரியர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கும் வகையில் உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT