தமிழ்நாடு

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை: போராட்டத்தில் குதித்த ஐடி ஊழியர்கள்

DIN


சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில், சென்னை ஐடி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் வளாகத்தில் அமைந்துள்ள  ஏராளமான மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தரமணியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் பணிகளை புறக்கணித்துவிட்டு, அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிண்டி ஒலிம்பியாவில் மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களும், சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளைத் தாங்கியும், கோஷங்களை எழுப்பியும், மென்பொருள் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். பெருங்குடியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மென்பொருள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT