நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கிச் செல்லும் கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக கெங்கரை அருகில் உள்ள நடுஹட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (29) கடந்த 5 வருடங்களாகப் பணியாற்றி வந்தார்.
கண் வலி காரணமாக கடந்த வாரம் 2 கண்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக வேலைக்குச் செல்ல முடியவில்லை என மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டின் முற்றத்தில் திங்கள்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சோலூர்மட்டம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.