குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்து பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வாக்களிக்கவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக வாக்குறுதி அளித்தால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரிப்பதாகவும், இல்லாவிட்டால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அன்புமணி அறிவித்திருந்தார்.
ஆனால், மத்திய அரசின் சார்பில் எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் அன்புமணி புறக்கணித்தார்.