சென்னை கலங்கரை முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பாதை: முதல்வர் அறிவிப்பு
சென்னை கலங்கரை முதல் பூந்தமல்லி வரை 4வது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சென்னை: சென்னை கலங்கரை முதல் பூந்தமல்லி வரை 4வது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, சென்னை கலங்கரை விளக்கம் முதல் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலின் 4வது வழித்தடம் அமைக்கப்படும்.
இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து அளிக்கும்படி மெட்ரோ நிறுவனத்திடம் கோரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், சென்னையைப் போல கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்திட சாத்திய கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.