நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.
நீட்தேர்வுக்கு விலக்கு கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அன்புமணி அண்மையில் சந்தித்தார். இந்த நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அவர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர்.