சிவகாசியில் வியாபாரி வீட்டில் ரூ.23 லட்சம் கொள்ளை
சிவகாசி நேஷ்னல் காலணியைச் சேர்ந்த அப்பாசலீம் (43). இவர் அச்சிகாகித மொத்த வியாபாரி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:00 PM
சிவகாசி நேஷ்னல் காலணியைச் சேர்ந்த அப்பாசலீம் (43). இவர் அச்சிகாகித மொத்த வியாபாரி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
திங்கள் காலை வீடு திரும்பிய இவர், 2-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பூட்டை உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement