சென்னை: சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடி பார்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தியாகராயர் நகரில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது. இங்கு இன்று அலுவலகத்திற்கு வந்த பார்சல் ஒன்றை ஊழியர்கள் பிரித்த பொழுது, உள்ளே வெடிகள் தயாரிக்கப் பயன்படும் மருந்து மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக அத்துடன் ஒரு மிரட்டல் கடிதமும் இருந்துள்ளது.
இது பற்றிய தகவல் கிடைத்தவுடன் மோப்ப நாய் சகிதம் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.