முகப்பு
தமிழ்நாடு

வடலூர் பேரூராட்சி அலுவலகம் பூட்டுப்போடும் போராட்டம்

வடலூர் பேரூராட்சியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக் கோரி வடலூர் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பேரவையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:46 PM
பகிர்:

வடலூர் பேரூராட்சியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக் கோரி வடலூர் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பேரவையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்நிலையில் இன்று பேரூர் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாததைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தைப் பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

இப்போராட்டத்திற்கு நுகர்வோர் சங்கத்தலைவர் கல்விராயன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்குப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அழைத்துச் சென்றனர். இதில், மாவட்ட சார் ஆட்சியர் ஜானி தாம் வர்கீஸ் பங்கேற்க உள்ளதாகத் தெரிய வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →