தமிழ்நாடு

'அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள்'

DIN

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நூலகங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது தென்காசி பேரவை உறுப்பினர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எழுப்பிய கேள்வியை ஒட்டி, திமுக உறுப்பினர் சக்கரபாணி துணைக் கேள்வியை எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், அண்ணா நூற்றாண்டு நூலகப் பராமரிப்புக்கு ரூ.5 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதேபோன்று, திமுக ஆட்சிக் காலத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நூலகங்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: இது குறித்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT