தமிழ்நாடு

புதுவை கடற்கரையில் சர்வதேச யோகா தின ஒத்திகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தினமணி

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கடற்கரைச் சாலையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

3-வது சர்வதேச யோகா தினம் நாளை கடைபிடிக்கபப்டுவதையொட்டி புதுச்சேரி சுற்றுலாத்துறை மெகா யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள். 

இதில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனையொட்டி  கடற்கரைச் சாலையில் காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யோகாசன ஒத்திகையில் ஈடுபட்டார்கள். இதை முன்னிட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT