முகப்பு
தமிழ்நாடு

கூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது: எம்எல்ஏ வெற்றிவேல்

கூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது என்று எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:17 PM
பகிர்:

கூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது என்று எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

சென்னை அடையாறில் டிடிவி. தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ வெற்றிவேல், 

முதல்வர் பழனிசாமி நரசிம்மராவ் போல் அமைதியாக இருக்கக் கூடாது. நரசிம்மராவ் அமைதியாக இருந்ததால்தான் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது. கூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது. 

பிரதமர் மோடி தம்பிதுரை மூலம் சசிகலாவிடம் ஆதரவு கேட்டது உண்மை. சசிகலா கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது. கோ. அரி போன்று தவறு செய்பவர்களை கிள்ளி எறிய எங்களுக்கு தெரியும் என்று கூறினார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →