தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு: திருநாவுக்கரசர் அறிவிப்பு!

DIN

சென்னை: விரைவில் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காலமானதால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், தி.மு.க. வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபடவேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

இதேபோல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தி.மு.க.வு.க்கு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT