தமிழ்நாடு

’ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை நிறுத்த வேண்டும்: மக்களவையில் அதிமுக கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் சிவகங்கை தொகுதி

DIN

புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் சிவகங்கை தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் வலியுறுத்தினார்.
வர்தா புயல் நிவாரணம்: அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ஜி.ஹரி, ’வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் மறுகட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நிதி உதவியாக ரூ.22,573 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.
கூடுதல் சிறப்பு நிதி: சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் எம்.சந்திரகாசி பேசுகையில், ’14-ஆவது நிதி ஆணையத்தின் எஞ்சியுள்ள நான்கு ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு வருடாந்திர சிறப்பு நிதியை தலா ரூ.2 ஆயிரம் கோடியாக அதிகரித்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
ஹெளரா ரயில்: திருவண்ணாமலை தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர்.வனரோஜா ’முக்கிய யாத்திரை தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள ரயில் நிலையத்தில் புதுச்சேரி - ஹெளரா இடையே இயக்கப்பட்டு வரும் ஹெளரா விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழர்களின் அடையாளம்!

கீரைப்பொடி

4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

2-ஆவது மனைவி தாக்கப்பட்டு கொலை: காா் ஓட்டுநா் கைது

செங்கை புத்தக திருவிழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

SCROLL FOR NEXT