முகப்பு
தமிழ்நாடு

முடிவை எதிர்த்து வழக்கு தொடருவோம்: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் (அதிமுக) தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று கட்சியின் துணைப்

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:17 AM
பகிர்:

இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் (அதிமுக) தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை இரவு அவர் அளித்த பேட்டி: ''இரட்டை இலை சின்னம் தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. சின்னத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். சின்னத்தை எவ்வாறு மீட்டெடுப்பது குறித்து அனைவரும் கலந்தாலோசித்து முடிவு செய்வோம்.

மீண்டும் சரித்திரம் திரும்பியுள்ளது. 1987-இல் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இதை போன்ற சூழல் நிலவியது. அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியோடு எதிர்கொண்டு சின்னத்தை மீட்டெடுத்தார். அதுபோல் இப்போதும் சின்னம் மீட்டெடுக்கப்படும். சின்னம் முடக்கப்பட்டதில் ஓ.பன்னீர்செல்வத்தின் பங்கு உள்ளது.

சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். நீதிமன்றத்தில் எங்கள் வாதங்களை முன்வைத்து சட்டப் போராட்டத்தில் வெற்றிபெறுவோம்.

அரசியல் அனுபவம்: இரட்டை இலை சின்னத்தை தாற்காலிகமாக முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு பின்னடைவு அல்ல; அரசியல் அனுபவம்.

இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை. அந்தத் தொகுதியில் போட்டியிட இன்று வியாழக்கிழமை (மார்ச் 23) காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் நான் வெற்றி பெறுவது உறுதி என்றார் டிடிவி தினகரன்.

முழு கட்டுரையைப் படிக்க →