ஏப்ரலில் 3 காற்றுச் சுழற்சிகள் தமிழகத்தில் மழை வாய்ப்பு: தேநீர் கடை வானிலை தகவல்
ஏப்ரல் மாதத்தில் அடுத்தடுத்து 3 காற்றுச் சுழற்சிகள் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகட்டூர் தேநீர் கடையில் எழுதப்பட்டுள்ள வானிலை தகவல் கூறுகிறது.
ஏப்ரல் மாதத்தில் அடுத்தடுத்து 3 காற்றுச் சுழற்சிகள் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகட்டூர் தேநீர் கடையில் எழுதப்பட்டுள்ள வானிலை தகவல் கூறுகிறது.
இதுகுறித்து அக்கடையில் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந.செல்வகுமார் வியாழக்கிழமை எழுதியுள்ள தகவல்: மார்ச் 28, 29 தேதிகளில் முத்துப்பேட்டை முதல் தூத்துக்குடி வரை கடலோரத்தில் மழைக்கு வாய்ப்பு வாய்ப்புள்ளது. அதேபோல் ஏப்ரல் 3 முதல் 6 வரை டெல்டா, தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
காற்றுச் சுழற்சி காரணமாக ஏப்ரல் 13-17, ஏப்.20-24, ஏப்.30-மே.5, மே.10-18 ஆகிய தேதிகளில் டெல்டா, உள்தமிழகம், தென் தமிழகத்தில் மிதமான அல்லது சற்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.