சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை: மக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது.
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது.
சென்னையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது.
இதை தொடர்ந்து, சென்னையில், தாம்பரம், கே.கே நகர், பல்லாவரம் குரோம்பேட்டை, பம்மல், பொழிச்சலூர், கிண்டி, வண்டலூர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.