பண்ருட்டி அருகே அரசு பேருந்து மீது கல் வீசித் தாக்குதல்
பண்ருட்டி அருகே நேற்றிரவு அரசு பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி அருகே நேற்றிரவு அரசு பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கள்கள் பல்வேறு இடங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு பண்ருட்டியில் மூன்று வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் அரசு பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதில் அரசு பேருந்து கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன.