தமிழ்நாடு

சூப்பர் டூப்பர் முதல்வராக செயல்படுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்: மு.க. ஸ்டாலின் தாக்கு

DIN

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் டூப்பர் முதல்வராக செயல்படுகிறார் என்று திமுக செயல்தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
 
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்க அரசு ஒத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத அளவிற்கு பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சூப்பர் டூப்பர் முதல்வராக அமைச்சர் ஜெயக்குமார் செயல்பட்டு வருகிறார்.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் நடந்த சிபிஐ சோதனையை அவர்கள் சட்டரீதியாக சந்திப்பார்கள். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் ராம் மோகன ராவ் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை எந்த நிலையில் உள்ளது என்பதை அரசு விளக்க வேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT