சென்னை: அரசியல் பற்றி எதையும் கேட்க வேண்டாம் என்று இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 3 நாட்களாக சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படும் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இன்று நிலையில், இன்று காலை தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ரசிகர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தை கவனிக்குமாறு கேட்டுக் கொண்ட ரஜினிகாந்த், ரசிகர்களுடனான தனது சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும், தன்னிடம் அரசியல் பற்றி எதையும் கேட்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.