தமிழ்நாடு

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் இரும்பு எண்ணெய் பேரல் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் கேஸ் வெல்டிங் செய்யுமிடத்தில் இரும்பு எண்ணெய் பேரல் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். 

தினமணி

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் கேஸ் வெல்டிங் செய்யுமிடத்தில் இரும்பு எண்ணெய் பேரல் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். 

அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் பழைய இருப்பு கிடங்கு நடத்துபவர்  சர்தார்பஷா. இவர் பல்வேறு பகுதிகளில் இருந்து இரும்பு , தகடு  சம்பந்தமான அனைத்து பொருள்களையும் வாங்கி கிடங்கில் வைத்து அதனை தகடுகளாக மாற்றி விற்பனை செய்துவந்துள்ளர். 

காமராஜர் நகர் சாரம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்ற வேலாயுதம் (43) இன்று எண்ணெய் பேரல்களை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி செய்து தகடுகளாக மாற்றி வந்துள்ளார். அப்போது ஒரு எண்ணெய் பேரல் திடீரென வெடித்து அவரது வயிற்றை கிழித்து விட்டது. இதில் பலத்த காயமடைந்த சம்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸார் சம்பவத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, சம்பத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் இரும்பு  கழிவுகளை கொண்டுவந்து, பாதுகாப்பற்ற வகையில்  கேஸ் மூலம் பிரித்தெடுத்து விற்பனை செய்தவந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு

8 மாதங்களாக விடுவிக்கப்படாத உணவு செலவுத் தொகை: ஆதி திராவிடா் நல விடுதியில் உணவு வழங்குவதில் சிக்கல்

மூமுக நிா்வாகிக்கு கத்திக் குத்து

பெத்லஹேமில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

மனைவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கணவா் கைது

SCROLL FOR NEXT