குன்னூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணம் ஆங்காங்கே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சற்று வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவுகிறது. இதனிடையே குன்னூரில் பெய்து வரும் தொடர் மழையால் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டு ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் விழுந்ததுள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலைமை சரியானவுடன் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலை ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிரம்மத்திற்குள்ளாகியுள்ளனர்.