தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவ மழை!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு முன்னதாக இன்று தொடங்கியது.
தமிழ்நாடுதமிழகத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவ மழை!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு முன்னதாக இன்று தொடங்கியது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு முன்னதாக இன்று தொடங்கியது.
வழக்கமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் என்பது ஜுன் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை பெறுவது வழக்கம்.
ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை இன்றே தொடங்கியது. நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை பொழியத் தொடங்கியது இதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
வழக்கத்திற்கு மாறாக சீசன் முன்னதாக தொடங்கியதால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையிலும் தற்பொழுது சில இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.