தமிழ்நாடு

கடலில் சிக்கியவர்களை மீட்க கடற்படை வீரர்கள் ஒத்திகை

DIN

பாம்பன் அருகே வியாழக்கிழமை பாக். நீரிணை பகுதியில் கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது போன்று இந்திய கடற்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே மன்னார் வளைகுடா மற்றும் பாக். நீரிணை ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் நவ. 2-ஆவது வாரம் இந்திய கடற்படை விரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது வழக்கம். 
உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் பருந்து விமானப் படை தளத்தில் இருந்து வீரர்கள் ஹெலிகாப்டர்களில் சென்று பயிற்சியில் ஈடுபடுவர். 
இதன்படி, உச்சிப்புளியில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து வியாழக்கிழமை 3 ஹெலிகாப்டர்களில் கடற்படை வீரர்கள் புறப்பட்டு, பாம்பன் அருகேயுள்ள பாக். நீரிணைப் பகுதிக்குச் சென்றனர். 
அங்கு கடலில் படகு கவிழ்ந்து அதில் மீனவர்கள் சிக்கிக்கொள்வது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியில் ஹெலிகாப்டரை கடல் மட்டத்திற்கு சிறிது உயரத்தில் நிறுத்தியபடி, கடற்படை வீரர்கள் கடலில் குதித்து மீனவர்களை மீட்பது போன்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT