தமிழ்நாடு

விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்த நவ.30 வரை காலக்கெடு

DIN

தமிழகத்தில் நெற்பயிர் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் 30 -ஆம் தேதிக்குள்(நவ.30) அதற்கான காப்பீட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண் உற்பத்தித் துறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக் கொண்டார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் கள விளம்பரத் துறை, தனது கள விளம்பர அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கை சென்னையில் புதன்கிழமை நடத்தியது. பயிலரங்கை தொடக்கி வைத்து ககன்தீப் சீங் பேடி பேசியது:
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஆண்டு சேர்ந்த விவசாயிகள் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டைவிட இருமடங்கு அதிகரித்து 15 லட்சமாக இருந்தது.
இந்தத் திட்டத்தில் பயிர்களின் சேத மதிப்பீடு கிராம அளவில் மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் காப்பீடு பெறுவது எளிதாகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் பயிர்க் காப்பீடு மூலம் விவசாயிகள் பெரிதும் பலனடைந்துள்ளனர். 
தமிழ்நாட்டில் நெற்பயிர் நடவு செய்துள்ள விவசாயிகள் இந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுக் கட்டணத்தை வரும் 30 -ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்த காலக்கெடுவுக்கு பிறகு பணம் செலுத்தினால் காப்பீடு கிடையாது.
தமிழக அரசு நுண்ணீர் பாசனத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசன வசதிக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1,200 கோடி செலவில் 7 லட்சம் ஏக்கர் நிலம் சொட்டு நீர் பாசன வசதி பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 67 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 
15 இடங்களில் சந்தைகள்: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மாநில அளவில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக மின்னணு விற்பனை மையத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தலா ரூ. 30 லட்சம் செலவில் தமிழகத்தில் 15 சந்தைகளை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் ககன்தீப் சிங் பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT