'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' சார்பில் இரண்டு நாள் வீட்டுமனை கண்காட்சி சனிக்கிழமை (நவ.25) தொடங்குகிறது.
இரண்டு இடங்களில்...: இந்தக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம், சென்னை கலைவாணர் அரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
கண்காட்சியில் அக்ஷயா ஹோம், அசோக் நந்தவனம், ஒலிம்பியா, அட்ராயிட், ஜான்ஸன், ஸ்ரீராம், காசா கிராண்டே, யுகா ஹோம்ஸ், ஜெயின் ஹவுசிங், சித்தார்த் பவுண்டேஷன்ஸ், பத்மாவதி ரியாலிட்டி போன்ற 80-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
கண்காட்சியில் வீட்டுமனை நிறுவனங்கள் மட்டுமின்றி, வங்கிகளும் தங்களது அரங்குகளை அமைத்திருக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்ஸிஸ் வங்கி, இண்டியா புல்ஸ் போன்ற நிறுவனங்கள் மிக எளிய முறையில் வீட்டுக் கடன் வசதிகளை செய்து தருகின்றன. மிக அதிக விலையுள்ள அடுக்குமாடி பிளாட்டுகள், நடுத்தர மக்கள் வாங்கும் பட்ஜெட் வகை பிளாட்டுகளும் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்படுகின்றன.