விராலிமலை அருகே விபத்து நேரிட்ட காருக்குள் மரகதலிங்க சிலை: போலீஸார் கைப்பற்றி விசாரணை
விராலிமலை அருகே இன்று நேரிட்ட சாலை விபத்தில் காரில் கடத்தி வரப்பட்ட மரகத லிங்கத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகே இன்று நேரிட்ட சாலை விபத்தில் காரில் கடத்தி வரப்பட்ட மரகத லிங்கத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலை அருகேயுள்ள கொண்டமநாயக்கன் பட்டி பிரிவு அருகே மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று திருச்சியிலுருந்து விராலிமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது.
இதில் காரில் பயணம் செய்த 4 பேர் பலத்தகாயமடைந்து சுயநினைவை இழந்தனர். அதனைத்தொடர்ந்து விபத்து குறித்து அறிந்த விராலிமலை காவல்துறையினர் நிகழ்விடம் சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீஸார் காரை சோதனையிட்டபோது 8 கிலோ மதிப்புடைய மரகதலிங்க சிலை காருக்குள் இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து சிலையை கைப்பற்றிய போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.