தமிழ்நாடு

விராலிமலை அருகே விபத்து நேரிட்ட காருக்குள் மரகதலிங்க சிலை: போலீஸார் கைப்பற்றி விசாரணை

சி. உதயகுமார்

விராலிமலை அருகே இன்று நேரிட்ட சாலை விபத்தில் காரில் கடத்தி வரப்பட்ட மரகத லிங்கத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலை அருகேயுள்ள கொண்டமநாயக்கன் பட்டி பிரிவு அருகே மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று திருச்சியிலுருந்து விராலிமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. 

இதில் காரில் பயணம் செய்த 4 பேர் பலத்தகாயமடைந்து சுயநினைவை இழந்தனர். அதனைத்தொடர்ந்து விபத்து குறித்து அறிந்த விராலிமலை காவல்துறையினர் நிகழ்விடம் சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீஸார் காரை சோதனையிட்டபோது 8 கிலோ மதிப்புடைய மரகதலிங்க சிலை காருக்குள் இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து சிலையை கைப்பற்றிய போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT