முகப்பு
தமிழ்நாடு

நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

ஆம்பூர் அருகே அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் நில அதிர்வு காரணமாக தெருக்களில் திரண்ட பொதுமக்கள்.
பகிர்:

ஆம்பூர் அருகே அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு திடீரென நில அதிர்வு 3 முறை ஏற்பட்டது. 
முதல் முறை லேசான அதிர்வும், இரண்டாவது முறை அதிக அதிர்வும் ஏற்பட்டது. 
இதில், வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே விழுந்தன. 3-ஆவது முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. 
நில அதிர்வு ஏற்பட்டபோது பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. 
நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்து தெருக்களில் நின்றனர்.
மீண்டும் நில அதிர்வு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்லாமல் நீண்ட நேரம் தெருக்களிலேயே இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →