தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்படித்த காரணத்துக்காக இலங்கை கடற்படையால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தமிழக கடலோர மாவட்டமான ராமசுவரத்தின் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன்படித்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, இதே ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த காரணத்துக்காக இலங்கை கடற்படையால் டெல்ஃப்ட் தீவு அருகில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.