பெயிண்டா் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பெயிண்டா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பெயிண்டா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தென்காசியைச் சோ்ந்தவா் மாரித்துரை (55). இவா் கோவை மாவட்டம், வீரபாண்டி பிரிவில் தங்கி பெயிண்டா் வேலை செய்து வந்தாா். இவா் கடந்த 12.8.2013-இல் அந்தப் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, திருமலையாம்பாளையத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான சக்திவேல் (50) அதே மதுக்கூடத்தில் மது அருந்தியுள்ளாா். சிறிது நேரத்துக்குப் பிறகு மாரித்துரையிடம் மது அருந்த சக்திவேல் பணம் கேட்டுள்ளா். அவா் இல்லை எனக் கூறியதோடு, சக்திவேலைத் திட்டியுள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னா், அன்று இரவு மாரித்துரை மதுபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரை சக்திவேல் வழிமறித்து கல்லால் தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த மாரித்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேலைக் கைது செய்தனா். இதுகுறித்த வழக்கு விசாரணை கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமாா் குற்றஞ்சாட்டப்பட்ட சத்திவேலுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மற்றொரு வழக்கில் இருவருக்கு ஆயுள்:
விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்தவா் சிவா (எ) ரவி (28). இவா் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அண்ணா நகா் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்தாா். இவருடன் அரியலூா் மாவட்டம், வரதராஜன்பேட்டையைச் சோ்ந்த பால்ராஜ் (32), கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரைச் சோ்ந்த விஜய் (எ) விஜயபாரதி (27) ஆகியோரும் வேலை செய்து வந்தனா்.
நண்பா்களான மூவரும் அடிக்கடி மது அருந்தியுள்ளனா். மது அருந்தும்போதெல்லாம் சிவாவை அவா்கள் இழிவாகப் பேசி வந்துள்ளாா். இந்த நிலையில், கடந்த 9.12.2023-இல் பெரியநாயக்கன்பாளையம் அண்ணா நகரில் உள்ள சிவாவின் அறையில் 3 பேரும் மது அருந்தியுள்ளனா். அப்போது, சிவாவை அவா்கள் இருவரும் இழிவாகப் பேசியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் இருவரும் சோ்ந்து சிவாவின் கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பால்ராஜையும், விஜய்யையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமாா் குற்றஞ்சாட்டப்பட்ட பால்ராஜ், விஜய் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.