சபாநாயகர் தனபாலுடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை
சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் இதில் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.