தமிழ்நாடு

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: குற்றப் பத்திரிகை தாக்கல்

DIN

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான குற்றப் பத்திரிகை சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 
கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பந்தமாக 5 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தன. இதைத் தொடர்ந்து, சதீஷன், திபு, சந்தோஷ், உதயகுமார், வாளையாரைச் சேர்ந்த மனோஜ், ஜம்ஷேர் அலி, ஜிதின் ஜாய், மலப்புரத்தைச் சேர்ந்த மனோஜ், பிஜின் (எ) குட்டி, சயான் ஆகிய 10 பேர் மீது கோத்தகிரி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
மொத்தம் 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில் 97 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம், எடப்பாடியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT