தமிழ்நாடு

கிரிக்கெட் மட்டை தாக்கி மாணவர் சுய நினைவிழப்பு: ஆசிரியர் கைது

DIN

திருச்செங்கோடு அருகே அரசுப் பள்ளியில் கிரிக்கெட் விளையாடிய ஆசிரியரின் கையிலிருந்து நழுவிச் சென்ற மட்டையால் பலத்த காயமடைந்த மாணவர் ஒருவர் சுய நினைவை இழந்தார். அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மொளஸி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியரை திங்கள்கிழமை கைது செய்தனர்.
பரமத்தி வட்டம், கந்தம்பாளையம் அருகிலுள்ள சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். ரிக்ஷா தொழிலாளி. இவரது மனைவி சின்ராயி கூலிவேலை செய்து வருகிறார். இவர்களது மகன் விஸ்வேஷ்வரன். இவர், விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பயின்று வருகிறார். இவர், பள்ளி அருகிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே, ஆசிரியர் குப்புசாமி என்பவர் மாலையில் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது ஆசிரியரை கிரிக்கெட் விளையாட வருமாறு மாணவர்கள் அழைத்தனராம். அதை ஏற்று, ஆசிரியர் குப்புசாமியும் மாணவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். ஆசிரியர் குப்புசாமி சில மாணவர்களுடன் தனியாக கிரிக்கெட் விளையாடினார். மாணவர் விஸ்வேஷ்வரன், சதீஷ் உள்ளிட்ட சக நண்பர்களுடன் பக்கத்திலேயே கபடி விளையாடிக் கொண்டிருந்தாராம்.
ஆசிரியர் குப்புசாமி மூன்று பந்துகளை அடித்துவிட்டு 4 -ஆவது பந்தை அடிக்க முயன்றபோது, கிரிக்கெட் மட்டை அவரது கையில் இருந்து வேகமாக நழுவிச் சென்றது. அந்த மட்டை அருகில் கபடி விளையாடிக் கொண்டிருந்த சதீஷ், விஸ்வேஷ்வரன் மீது பட்டது.
காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சதீஷ் சிறிது காயத்துடன் தப்பினார்.
விஸ்வேஷ்வரனுக்கு தலையில் மட்டை பட்டதால் ரத்தம் கசியவே, அவரை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் சுய நினைவை இழந்து விட்டதாகக் கூறி, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந் நிலையில், இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆசிரியர் குப்புசாமியைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT