பணியின் போது உயிரிழந்த 10 காவலர் குடும்பங்களுக்கு நிதி: முதல்வர் பழனிசாமி உத்தரவு
பணியின் போது உயிரிழந்த 10 காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பணியின் போது உயிரிழந்த 10 காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:-சென்னை செம்மஞ்சேரி காவல் நிலைய சட்டம்-ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளர் சி.தேவேந்திரன், திண்டுக்கல் அம்பாத்துரை சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பிரபாகர நாகேந்திர ராஜா, சென்னை பெருநகர ஆயுதப்படை காவலர் எம்.முரளிகுமார், திருப்பூர் மூலனூர் தலைமைக் காவலர் கே.மோகன்ராஜ், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் க.ரவிச்சந்திரன், நீலகிரி லவ்டேல் காவலர் டி.உதயகுமார், திருச்சி பொன்மலை தலைமைக் காவலர் ஏ.ஜான்பிரிட்டோ, கும்பகோணம் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் பி.நடராஜன், மதுரை மாநகரம் திலகர் திடல் தலைமைக் காவலர் எஸ்.கருப்பையா, விருதுநகர் காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் உடல்நலக் குறைவு, சாலை விபத்து போன்ற காரணங்களால் உயிரிழந்தனர்.
உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.