1,6,9,11ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் நாளை மறுநாள் வெளியீடு: செங்கோட்டையன்
1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் வெளியிடுகிறார்.
9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடத் திட்டங்களும் கணினி மயமாக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.