தமிழ்நாடு

கண் மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பம்: டாக்டர்களுக்கு பயிற்சி

DIN


கண் மருத்துவத் துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தொடர் கல்வி நிகழ்ச்சி கல்பவிருக்ஷô 18' டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியை தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அமர் அகர்வால் கூறியது: இந்தியாவில் 1.80 கோடி பேருக்கு பார்வைத்திறன் இழப்பு உள்ளது. இவர்களில் 55 சதவீதம் பேருக்கு கண்புரையால் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. கண் மருத்துவத் துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள், புதிய உத்திகளை இன்றைய இளம் கண் மருத்துவர்களுக்கு எடுத்துக் கூறுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
நாடு முழுவதிலுமிருந்து 200-க்கும் மேற்பட்ட கண் மருத்துவ நிபுணர்கள், கண் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பலன் அடைய உள்ளனர் என்றார் அவர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேரலை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நவீன சிகிச்சைகள் தொடர்பான விவாதங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண் மருத்துவ சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொண்டோருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT