தமிழ்நாடு

கேரளத்துக்கு நிதியளித்த தொழுநோயாளிகள்!

DIN


கேரள நிவாரண நிதிக்கு திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த தொழுநோயாளிகள், யாசகர்கள் நிதியுதவி அளித்தனர்.

கேரளத்தில் பெய்த பலத்த மழையால் அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, உடை, இருப்பிடம் இன்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இவர்களின் துயர் துடைக்க நாடு முழுவதும் இருந்து நிவாரணப் பொருள்களும், நிதி உதவியும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடியில் இயங்கி வரும் அரசு தொழுநோய் இல்லத்தில் தங்கியுள்ள 38 பேர் சேர்ந்து தாங்கள் சேர்த்து வைத்திருந்த ரூ.1,035-ஐ கேரள நிவாரண நிதிக்கு திங்கள்கிழமை அளித்தனர். இதேபோல, திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் யாசகம் பெற்று வரும் கை, கால்களை இழந்த ஏழுமலை, தனது ஒரு நாள் யாசகப் பணம் ரூ. 100-ஐ அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT