பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரத்துக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை (ஆக. 21) இயக்கப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 21) மாலை 5.30 மணிக்கு முன்பதில்லாத சிறப்பு ரயில் (எண். 06049) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.40 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.
இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போத்தனூர் சந்திப்பு, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், மாவேலிக்கரை, காயன்குளம் உள்பட பல்வேறு நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.