தமிழ்நாடு

கருணாநிதி நினைவஞ்சலிக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு

DIN

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். 

திமுக சார்பில் மறைந்த கருணாநிதிக்கு நினைவஞ்சலிக் கூட்டம் ஒவ்வொரு துறையினரையும் கொண்டு நடைபெற்று வருகிறது. அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அகில இந்திய தலைவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. 

இந்த அழைப்பை பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா ஏற்று, நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். 

ராகுல் காந்தி பங்கேற்கவில்லை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கருணாநிதி நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெறும் நேரத்தில் ராகுல் காந்தி வெளிநாடு செல்ல உள்ளதால் அவர் பங்கேற்கவில்லை என்றும், அவருக்குப் பதில் குலாம் நபி ஆசாத் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு தேசியத் தலைவர்கள் கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT