தமிழ்நாடு

சஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருது  

சஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

புது தில்லி: சஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன்.  விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்னும் ஊரைச் சேர்ந்தவர்.  சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை ஆகிய தளங்களில் தன்னுடைய தொடர்ச்சியான பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

இவர் 2014-ஆம் ஆண்டு எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு தற்போது சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணில் வறிய நிலையில் வாழும் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிக் கூறும் படைப்பாக 'சஞ்சாரம்' உருவாக்கப்பட்டுள்ளது. 

சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததற்காக தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் மாநாடு: பிரேமலதா

சென்னையில் 2 மாதங்களுக்குள் வருகிறது டபுள் டக்கர் பேருந்து?

பிரசாரம், சாலை வலம்: வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்தது தமிழக அரசு!

தனியார் குடோனுக்குள் நுழைந்த சிறுத்தை! நூலிழையில் உயிர்தப்பிய காவலாளி! | Coimbatore

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT