தமிழ்நாடு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது அவதூறு வழக்கு

தினமணி

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாகப் பேசியதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது, பெரம்பலூர் போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 பெரம்பலூர் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வரையும், அமைச்சர்களையும் அவதூறாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பேசியதாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் காவல் நிலையத்தில் அதிமுகவைச் சேர்ந்த வழக்குரைஞர் துரை.பெரியசாமி வெள்ளிக்கிழமை இரவு புகார் செய்தார்.
 இதன் பேரில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல், அவதூறாகப் பேசி மனதை புண்படுத்துதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பெரம்பலூர் காவல் ஆய்வாளர் சுகந்தி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT