விஜய் சேதுபதி மகா நடிகன், நல்ல மனிதன் புகழ்ந்து என நடிகர் ரஜினிகாந்த் புழந்து பேசினார்.
"பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியது: ‘நான் விஜய் சேதுபதி நடித்த படங்களை பார்த்துள்ளேன். அவர் ஒரு சீனுக்காக மிகவும் மெனக்கெடுகிறார். அவர் மகா நடிகன் என கூறினார். அப்போது மேடையில் இருந்த விஜய் சேதுபதி எழுந்து வணக்கம் தெரிவித்தார்.
மேலும், விஜய் சேதுபதி மிகவும் நல்லவர். அவர் அணைத்து விசயத்தையும் வேறு கோணத்தில் பார்கிறார். வேறு விதமாக பேசுகிறார். அவரிடம் புத்தகம் படிப்பீர்களா இல்லை அதிகமாக படம் பார்பீர்களா என கேட்டதற்கு இரண்டும் இல்லை என கூறினார். அவர் மிகவும் நல்லவர் அவர் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். நீண்ட நாள் கழித்து நல்ல நடிகனோடு நடித்த திருப்தி ஏற்பட்டது என புழந்து பேசினார்.
மேலும், நடிகர் சசிகுமாரும் மிகவும் நல்லவர். குழந்தைக்கு தாடி மீசை வைத்தது போல அவரது உள்ளம் இருக்கிறது என கூறினார். அவரும் நல்ல இருக்க வேண்டும் என கூறினார்.