5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்த தமிழிசையின் கருத்தில் மரண ஓசை உள்ளது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தல், எந்த விதத்திலும் தோல்வி அல்ல. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில், வெற்றிகரமான தோல்வி என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்தார். தமிழக காங்கிரசின் இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது,
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்த தமிழிசையின் கருத்தில் மரண ஓசை உள்ளது. விரக்தியின் உச்சகட்டத்திற்கே தமிழிசை சென்றுவிட்டார். பாஜகவில் இருந்து விலக வேண்டும்.
பிரதமர் மோடியை வீழ்த்தக்கூடிய சக்தியாக ராகுல் உள்ளார். விரைவில் அவர் பிரதமராக வரக்கூடிய சூழல் உள்ளது. கஜா புயல் நிவாரணத்திற்கு போர்வை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு கமிஷன் பெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.